இமைச் சிறகை
நீ சொடுக்க
இமயம் தாண்டி
நான் பறக்க...
தேன் இதழை
நீ பிதுக்க
ஆசை அணை
அது உடைக்க...
பாய்ந்துவரும் வெள்ளம்
சேரத்துடிக்கும் உள்ளம்
எதிர்காலம் கிடையாது
இறுதிவரை விளையாடு...
துணையென்ற வார்த்தைக்கு
உனையன்றி வேறேது
மண்வாரி இறைத்தாலும்
வேரன்பு மாறாது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக