ஞாயிறு, 23 ஜூன், 2019

மழை...
அந்த நேரம்
என் விழி
ஐன்னல் ஓரம்


எனைத் தொடும்
குளிர் காற்று
நெஞ்சில் எழும்
கவிதை ஊற்று


யாரும் இல்லை வெளியே
என சாரல் வந்து அழைக்கும்


அதை வெளியில் சென்று காண
இருளும் என்னை அணைக்கும்


தெரியாத
எனைக் கண்டு
மின்னல் கூட சிரிக்கும்


அறியாத
எந்தன் காதில்
இடி கூட இசைக்கும்


மழை நீரில்
எழும் குமிழ்கள்
அவள் நினைவை எழுப்பும்


வானவில்லின்
காட்சி கூட
அவள் முகமாய் ஜொலிக்கும்


மனம்
இவையாவும் பிரியாத
வரம் கேட்டுத் தவிக்கும்


மழையே
நீ தொடர்வாயா
நான் கேட்ட
வரம் தருவாயா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக