புதன், 31 ஜூலை, 2019

மலரைப் போல
மௌனமாக உதிர்ந்துவிட்டாய்

நாட்கள்
நகர நகர தான்
நரகம் தெரிகிறது

சிறகைப் பிரிந்த
இறகின் தவிப்பு

மனதின் உள்ளே
எரிமலைக் குழம்பு

நரம்பு வெளிகளிலே
வலி வெள்ளம்

சுடு மணல்
மீன்யெனத் துள்ளும்

எங்கு ஓடியும்
உள்ளுக்குள் நீ

காசில்லாதவன்
உனக்காக மூச்சு வாங்கினேன்...

திங்கள், 22 ஜூலை, 2019

வாத்து

நீர் வானில் பறக்கும்
உன்னதப் பறவை

காலத்தைப் போல
சலனமில்லாத பயணம்

பறப்பதற்கு ஆசைப்பட்டு
இருப்பதை இழக்காத
யதார்த்தவாதி

தாமரைஇலைத் தண்ணீர் போல்
ஒட்டி ஒட்டாமல்
துறவி


திங்கள், 15 ஜூலை, 2019

மண்ணை அல்ல
என்னை முத்தமிடும்
மலைத் துளிகள்


விடிய விடிய
முத்தச் சத்தம்
இரவு முழுதும்
இன்ப யுத்தம்...


இன்பங்கள் மார்மீது
குவித்து வைப்பாள்
மூழ்கி முத்தெடுத்திட
முகம் அணைப்பாள்


பலமுறை மறித்தோம்
தொடத்தொட உயிர்த்தோம்
பிரிந்திட மனமில்லை
இருளுக்குள் புதைந்தோம்...


வெருமெனவே ஒளித்துவைப்பாள்
நித்தமெனைத் தேடவைப்பாள்
வேண்டுமென்றே தோற்க்கவைப்பாள்
இரகசியங்கள் பரிசளிப்பாள்


மொத்தமும் உன்னை
கொட்டித் தீர்த்துவிடு
என்னை முழுவதுமாய்
உன்னில் மூழ்கவிடு...


என்னை வாழவைக்க
தன்னை மாய்த்துக் கொள்வாள்
நீயெந்தன் இறைவியடி
உனைப்பிரிந்தனான் துறவியடி


வியாழன், 11 ஜூலை, 2019


இமைச் சிறகை
நீ சொடுக்க
இமயம் தாண்டி
நான் பறக்க...

தேன் இதழை
நீ பிதுக்க
ஆசை அணை
அது உடைக்க...

பாய்ந்துவரும் வெள்ளம்
சேரத்துடிக்கும் உள்ளம்
எதிர்காலம் கிடையாது
இறுதிவரை விளையாடு...

துணையென்ற வார்த்தைக்கு
உனையன்றி வேறேது
மண்வாரி இறைத்தாலும்
வேரன்பு மாறாது...

புதன், 10 ஜூலை, 2019

அறைப் பொட்டுத் தீப்பிழம்பு
புகைச் சேலைப் பூட்டினாள்

மையல் தோய்ந்த கண்களால்
மெய்யில் சூட்டைக் கூட்டினாள்

இடை வெளியைக் காட்டினாள்
இன்ப வீணை மீட்டினாள்

நாதம் காதினைக் கொஞ்சிட
நெஞ்சம் என்னில் சில்லிட
நெருங்கி நெருங்கி வந்தேன்
நெருடலோடு நின்றேன்

நான் இருள்

என்வெண்ணிலா
ஓர்நாள் மறைந்ததடி...

காமம் கொண்டு
காலம் கண்டு
விழுங்கி விட்டேன்
எனப் பிறர் நினைப்பார்

பிறிந்து நிற்கும்
என் துயர் யாரறிவார்

வளர்பிறை தேய்பிறை சுழலுதடி
என்வெண்ணிலா
ஓர்நாள் மறைந்ததடி...


செவ்வாய், 9 ஜூலை, 2019

நான் சேர்த்துவைத்த
உன் புன்னகைப் பூக்களுக்கு
தினம் கண்ணீர் வார்க்கிறேன்


உன் பெயரை மட்டுமே
மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்க்கிறேன்


ஒலி அலைகள்
உன் உருவாய்
மாறக் கண்டேன்


கட்டி அணைக்க
எட்டிக் குதித்தேன்
இன்னும் மண்ணைச் சேரவில்லை


என்னைத் தொலைத்துவிட்டு
உன் இதழ்கள்
துளவுகிறேன்


மீண்டும் எனை
மீட்டெடுக்கும் உந்தன்
முத்தம்...

ஞாயிறு, 7 ஜூலை, 2019

என் அறை
முழுவதும் ஏக்கம்,
கண்கள் எதையோ
தேடித்தேடித் தோற்கும்...


இதயம் நிரம்ப
வலிகள் பூக்கும்,
விடியவிடிய நினைவுகள்
மணமாய் கமழும்...


இரண்டு எழுத்துகள்தான்
அவள் பெயர், 
ஏனோ என் மனதில்
நீண்டு கொண்டே போகிறது


நினைவிலும் கனவிலும்
கலந்துவிட்டாய்
கண்களில் இருந்து
ஏன் மறைந்துவிட்டாய்


சுவடுகள் இல்லாமல்
நடந்து போகிறாய்
வலிகளை மட்டும் விதைகளாய்
மனதில் பதிந்து போகிறாய்


விதைகள் விளைகின்றன
இன்ப மின்னல் பூக்கின்றன
உன் கனவைக் கைபிடித்து
காத்திருப்பேன் உயிர்ப்பிழைத்து...