ஞாயிறு, 9 ஜூன், 2019

இரவெல்லாம்
உன்னோடுப் பேசிக்கொண்டே
தூங்கிப் போகிறேன்...


விழித்தவுடன் நீ இல்லாது,
மனம் கனத்துப் போகிறேன்...


உடன் நான்
வேண்டுவது ஒன்றுதான்
"பகலெல்லாம் கனவாகிப் போகட்டும்,
இரவே மெய்யாகித் தொடரட்டும்..."


ஒற்றை மரத்தின்
உயிரே உறவே குயிலே,
உன் ராகம் கேட்க ஏங்கினேன்.


நீர் இன்றி இல்லை,
நீ இன்றி வாடும்
கோடை இது...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக