ஞாயிறு, 23 ஜூன், 2019

மழை...
அந்த நேரம்
என் விழி
ஐன்னல் ஓரம்


எனைத் தொடும்
குளிர் காற்று
நெஞ்சில் எழும்
கவிதை ஊற்று


யாரும் இல்லை வெளியே
என சாரல் வந்து அழைக்கும்


அதை வெளியில் சென்று காண
இருளும் என்னை அணைக்கும்


தெரியாத
எனைக் கண்டு
மின்னல் கூட சிரிக்கும்


அறியாத
எந்தன் காதில்
இடி கூட இசைக்கும்


மழை நீரில்
எழும் குமிழ்கள்
அவள் நினைவை எழுப்பும்


வானவில்லின்
காட்சி கூட
அவள் முகமாய் ஜொலிக்கும்


மனம்
இவையாவும் பிரியாத
வரம் கேட்டுத் தவிக்கும்


மழையே
நீ தொடர்வாயா
நான் கேட்ட
வரம் தருவாயா...

ஞாயிறு, 9 ஜூன், 2019

இரவெல்லாம்
உன்னோடுப் பேசிக்கொண்டே
தூங்கிப் போகிறேன்...


விழித்தவுடன் நீ இல்லாது,
மனம் கனத்துப் போகிறேன்...


உடன் நான்
வேண்டுவது ஒன்றுதான்
"பகலெல்லாம் கனவாகிப் போகட்டும்,
இரவே மெய்யாகித் தொடரட்டும்..."


ஒற்றை மரத்தின்
உயிரே உறவே குயிலே,
உன் ராகம் கேட்க ஏங்கினேன்.


நீர் இன்றி இல்லை,
நீ இன்றி வாடும்
கோடை இது...

 

சனி, 8 ஜூன், 2019

உன் நினைவுச் சிகரங்களில்
உருகி வரும் கண்ணீர்
உதடுகளை முத்தமிடும்
மொத்த காயங்களுக்கும் மருந்திடும்


காத்துக்கிடக்கும் உதடுகள்
வரங்கள் கேட்பது கண்ணீரை
நீ வந்து சேரும்வரை...


வற்றிப்போகாத விழிக் குளங்கள்
தங்க மீனூக்குக் காத்திருக்கும்
இரவு பகலெல்லாம் விழித்திருக்கும்
நீ நீந்தி விளையாடப் பிழைத்திருக்கும்...