வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

காதல்

ஒவ்வொரு நொடியும்
காத்துக்கொண்டிருக்கிறேன்


அனாதை ஆக்கிவிட்டு
அனைவருமே பொருளைத் தேடி


பொருட்களால் நிரப்பி
வாழ்க்கையைப்
பொருளற்றதாக்கிவிட்டார்


மின்னலை இழந்தக்
கண்களைக் காட்டிலும்
மின்னலால்
கண்களை இழந்திடலாம்


தென்றலை மறுத்த
ஜன்னலைக் காட்டிலும்
தென்றலால்
ஜன்னல்கள் பொடிபடலாம்


ஜீவனைப் பிரிந்து
ஜீவிதம் எதற்கு... 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக