சனி, 23 பிப்ரவரி, 2019

எங்கு வேண்டுமானாலும்
பயணப்படலாம்
எங்கே லகிக்கிறோமோ
அங்கே நிலை பெறலாம்

நிலை என்பதே
நிரந்திரம் இல்லாத பொழுது
வாழ்க்கை மெல்ல நகர்ந்து
நித்தியக் கலையாய் மாறும்

இலக்கணம் இல்லாத
ஓவியங்கள்தான்
நாளை இலக்கியம் ஆகின்றது


தம்மை அறியவைக்கும்
படைப்பை விட
உம்மை உணரவைக்கும்
கவித்துவம் தனித்துவம்


நீதான் பெண்ணே எனக்கு
இலக்கியம்
கவித்துவம்
என்றும் தனித்துவம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக