சனி, 23 பிப்ரவரி, 2019

எங்கு வேண்டுமானாலும்
பயணப்படலாம்
எங்கே லகிக்கிறோமோ
அங்கே நிலை பெறலாம்

நிலை என்பதே
நிரந்திரம் இல்லாத பொழுது
வாழ்க்கை மெல்ல நகர்ந்து
நித்தியக் கலையாய் மாறும்

இலக்கணம் இல்லாத
ஓவியங்கள்தான்
நாளை இலக்கியம் ஆகின்றது


தம்மை அறியவைக்கும்
படைப்பை விட
உம்மை உணரவைக்கும்
கவித்துவம் தனித்துவம்


நீதான் பெண்ணே எனக்கு
இலக்கியம்
கவித்துவம்
என்றும் தனித்துவம்...

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

காதல்

ஒவ்வொரு நொடியும்
காத்துக்கொண்டிருக்கிறேன்


அனாதை ஆக்கிவிட்டு
அனைவருமே பொருளைத் தேடி


பொருட்களால் நிரப்பி
வாழ்க்கையைப்
பொருளற்றதாக்கிவிட்டார்


மின்னலை இழந்தக்
கண்களைக் காட்டிலும்
மின்னலால்
கண்களை இழந்திடலாம்


தென்றலை மறுத்த
ஜன்னலைக் காட்டிலும்
தென்றலால்
ஜன்னல்கள் பொடிபடலாம்


ஜீவனைப் பிரிந்து
ஜீவிதம் எதற்கு... 
    

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

காதினில் சலங்கையின்
ஓர் பரல் அசைத்து
எனை அணைத்திடும்
நிசப்தத்தைக் கலைத்திடுவாள்

காற்றினும் மேவிய
தழுவல்கள் தந்து
என்னுள்
உயிர் மூச்சினைத்
தாழிட்டுப் பூட்டுகிறாள்

உதட்டோடு உறவாடி
உயிர் மூச்சை உறிஞ்சுகிறாள்
ஜீவச் சூடேற்றி
மொத்தமெனை ஆளுகின்றாள்

ஜீவன் சூடேறி
மேலேறி போகிறது
காலன் கண் பார்த்து
மெதுவாகச் சிரிக்கிறது...