காதல் அன்பிற்கு உரியவர்க்காக
அனைத்தையும் இழந்து நிற்கும்
அவள் அன்பிற்கு உரியவன் நான்
ஏனோ என் அவளை இழந்துவிட்டேன்
பழுத்த இலை கிளை பிரிந்து
பாழ் மணலில் வீழ்ந்ததம்மா
துயர் அணலில் காய்ந்ததம்மா
சருகுடைந்து கதறுதம்மா
என் வலி ஒலியாய் மாறிடினும்
செவிகள் சென்று சேர்ந்திடினும்
இதய வலி புரிவதில்லை
மீயொலிகள் கேட்பதில்லை
பகல் கனவு ஆனதனால்
உயிர் இங்கு அலையுதம்மா
உனை இமை மூடி இணைவதனால்
இறக்கும் வரம் வேண்டுதம்மா
விலகிவிலகி தொலைதுரம்
விழிஆடி விலகி மறைந்தாலும்
விலகவிலக நெருங்குகின்றாள்
மனதை மெல்ல நெருடுகின்றாள்
என் மாய மனக் கண்ஆடி
உள்நுழைந்து உலவுகின்றாள்
நெருங்கிநெருங்கி பெரும்காட்சியாகி
நெஞ்சமெங்கும் நிறைகின்றாள்
தனக்குத்தானே பேசுவதாய்
பிறர்க்கு நான் பித்தனானேன்
என்னுள் உன்னோடுப் பேசிப்பேசி
பெரும் ஆனந்தச் சித்தனானேன்
வார்த்தைகளைத் தொடர்ந்து இறைத்து
நா வறண்டு பாலை ஆகும்
காணல்நீரை உன் இதழில் பருகி
மீண்டும் சொற்களின் சோலை ஆகும்
அனைத்தையும் இழந்து நிற்கும்
அவள் அன்பிற்கு உரியவன் நான்
ஏனோ என் அவளை இழந்துவிட்டேன்
பழுத்த இலை கிளை பிரிந்து
பாழ் மணலில் வீழ்ந்ததம்மா
துயர் அணலில் காய்ந்ததம்மா
சருகுடைந்து கதறுதம்மா
என் வலி ஒலியாய் மாறிடினும்
செவிகள் சென்று சேர்ந்திடினும்
இதய வலி புரிவதில்லை
மீயொலிகள் கேட்பதில்லை
பகல் கனவு ஆனதனால்
உயிர் இங்கு அலையுதம்மா
உனை இமை மூடி இணைவதனால்
இறக்கும் வரம் வேண்டுதம்மா
விலகிவிலகி தொலைதுரம்
விழிஆடி விலகி மறைந்தாலும்
விலகவிலக நெருங்குகின்றாள்
மனதை மெல்ல நெருடுகின்றாள்
என் மாய மனக் கண்ஆடி
உள்நுழைந்து உலவுகின்றாள்
நெருங்கிநெருங்கி பெரும்காட்சியாகி
நெஞ்சமெங்கும் நிறைகின்றாள்
தனக்குத்தானே பேசுவதாய்
பிறர்க்கு நான் பித்தனானேன்
என்னுள் உன்னோடுப் பேசிப்பேசி
பெரும் ஆனந்தச் சித்தனானேன்
வார்த்தைகளைத் தொடர்ந்து இறைத்து
நா வறண்டு பாலை ஆகும்
காணல்நீரை உன் இதழில் பருகி
மீண்டும் சொற்களின் சோலை ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக