திங்கள், 31 டிசம்பர், 2018

யாரும் இல்லாத
நெடிய
ஒற்றைப் பாதை
உன் கைவிரல்

என்
விரல் பற்றி
அழைத்துச் செல்கிறது

நான்
கேட்கும் வரம்
ஒன்றுதான்

பயணம்
முடிவின்றி தொடரட்டும்...

செவ்வாய், 25 டிசம்பர், 2018

இறுதி பேருந்தும்
கடந்துவிட்டது

இரண்டு
மிதிவண்டிகளின்
சினுசினுப்பும்
மெலிந்து ஓய்ந்தது

நிசப்த கொடி
மின்னலென படர்ந்து
உலக உருண்டையை
பின்னி மறைத்தது

நள்ளிரவு...


காரிருள் கருவறையில்
கூழாங்கற்கள் நதியோடும்
இலைகள் காற்றோடும்
நிலவு மேகத்தோடும்

பேசும் ரகசிய மொழிக்கு
வழக்கம்போல்
உறக்கம் அற்றவனாய்
செவி கொடுத்தேன்

விளங்கவில்லை எனினும்
எதையோ
அறிந்து கொண்டதை போல்
மனது
பேசத் தொடங்கி விட்டது

எனைக் கடந்து கொண்டிருக்கும்
உன் நினைவுகளோடு...

வியாழன், 20 டிசம்பர், 2018

காதல் அன்பிற்கு உரியவர்க்காக
அனைத்தையும் இழந்து நிற்கும்
அவள் அன்பிற்கு உரியவன் நான்
ஏனோ என் அவளை இழந்துவிட்டேன்

பழுத்த இலை கிளை பிரிந்து
பாழ் மணலில் வீழ்ந்ததம்மா
துயர் அணலில் காய்ந்ததம்மா
சருகுடைந்து கதறுதம்மா

என் வலி ஒலியாய் மாறிடினும்
செவிகள் சென்று சேர்ந்திடினும்
இதய வலி புரிவதில்லை
மீயொலிகள் கேட்பதில்லை

பகல் கனவு ஆனதனால்
உயிர் இங்கு அலையுதம்மா
உனை இமை மூடி இணைவதனால்
இறக்கும் வரம் வேண்டுதம்மா

விலகிவிலகி தொலைதுரம்
விழிஆடி விலகி மறைந்தாலும்
விலகவிலக நெருங்குகின்றாள்
மனதை மெல்ல நெருடுகின்றாள்

என் மாய மனக் கண்ஆடி
உள்நுழைந்து உலவுகின்றாள்
நெருங்கிநெருங்கி பெரும்காட்சியாகி
நெஞ்சமெங்கும் நிறைகின்றாள்

தனக்குத்தானே பேசுவதாய்
பிறர்க்கு நான் பித்தனானேன்
என்னுள் உன்னோடுப் பேசிப்பேசி
பெரும் ஆனந்தச் சித்தனானேன்

வார்த்தைகளைத் தொடர்ந்து இறைத்து
நா வறண்டு பாலை ஆகும்
காணல்நீரை உன் இதழில் பருகி
மீண்டும் சொற்களின் சோலை ஆகும்


புதன், 12 டிசம்பர், 2018

முறிந்த சிறகுகள்

முடங்கிக் கிடந்த மனதை

முடுக்குவித்து உயிர்த்தாய்

மனம் காதல் வானில் சிறகை

விரித்தபோது முறித்தாய்



வார்த்தைகள் சிரிக்க சிரிக்க

உதிர்த்தாய்

அதில்  சிறையாக்கி எனை வைத்தாய்

சுதந்திரம் கேட்டவனின் உள்ளத்தை

உளியைக் கொண்டு சிதைத்தாய்




கன்னி உனை

எண்ணி எண்ணி தினமே 

கலங்குதடி மனமே

உயிர் இருந்தும்

நான் இங்கு பிணமே




தொலைவில் நின்று நானும்

காதல் கொண்டு மகிழ்ந்தேன்

அருகில் வந்ததாலே

கானல் நீரை உணர்ந்தேன்




இருண்ட விழிகளிலே கண்டேன்

வெண்ணிலவை

விழித்த போது தான்

கனவென்று நொந்தேன்




நினைவில் உனைக்கான

நித்தமும்  ஏங்குகிறேன்

கண்களை வானத்தில்

சிறைவைத்து தூங்குகிறேன்




குளிர் நிலவே

எனை இரவாக ஏற்றுக்கொள்...

வெள்ளி, 9 நவம்பர், 2018

உந்தன் நன்நினைவுகள் போதுமடி
காலம் முழுதும் என் காதல் வாழும்

சந்தேகம் எழுகிறது
என்தேகம் எரிகிறது
கண்ணீரும் சுடுகிறது
உயிர்ஆவி பிரிகிறது

என் இறப்பிற்கு
என்னை அழ வைத்தவள் நீ

என்ன கொண்டு வந்தோம்
கொண்டு போவதற்கு... ?
உன் நினைவுகள்
(மட்டுமே)

கடைசி ஆசை
மறுபிறப்பும்
உன் இணைப்பும்

கண்ணீரை தந்தாலும்
பூக்களை தருவது காதல்

உன் நெஞ்சில்
வெடி வைத்து
அடியடியாய் கிணறு வெட்டி
கண்ணீராய் வடித்தெடுக்கும்
நான் மூடன்

நொடிக்கு நொடி
எனை கொல்லும்
சந்தேக நோயடி
குணமாகும் நாளினில்
நீ எனது தாயடி

பிச்சைக்காரன் நான்
ராஐ கிரிடத்தையும்
யாசக பாத்திரமாய் பார்கிறேன்

நீ வருந்தாதே
தங்கத்தை தான்
இந்த உலகம் உரசிப் பார்க்கும்

கல் நெஞ்சக்காரன் என்னில்
உன் நினைவுகள்
எறும்பாய் ஊர்ந்து பிளக்கும்