முடங்கிக் கிடந்த மனதை
முடுக்குவித்து உயிர்த்தாய்
மனம் காதல் வானில் சிறகை
விரித்தபோது முறித்தாய்
வார்த்தைகள் சிரிக்க சிரிக்க
உதிர்த்தாய்
அதில் சிறையாக்கி எனை வைத்தாய்
சுதந்திரம் கேட்டவனின் உள்ளத்தை
உளியைக் கொண்டு சிதைத்தாய்
கன்னி உனை
எண்ணி எண்ணி தினமே
கலங்குதடி மனமே
உயிர் இருந்தும்
நான் இங்கு பிணமே
தொலைவில் நின்று நானும்
காதல் கொண்டு மகிழ்ந்தேன்
அருகில் வந்ததாலே
கானல் நீரை உணர்ந்தேன்
இருண்ட விழிகளிலே கண்டேன்
வெண்ணிலவை
விழித்த போது தான்
கனவென்று நொந்தேன்
நினைவில் உனைக்கான
நித்தமும் ஏங்குகிறேன்
கண்களை வானத்தில்
சிறைவைத்து தூங்குகிறேன்
குளிர் நிலவே
எனை இரவாக ஏற்றுக்கொள்...