உனைத் தொட்ட காற்று
எந்தன் காதில் சொன்னது
உணர்வுகளைத் தீண்டி
நெஞ்சில் வெட்கம் தந்தது
அது சொன்னதை அறிவாயா...
எந்தன் உணர்வுகள் புரிவாயா...
கண்ணை மூடி திறக்கும் முன்னே
கண்ணெதிரே நீ வருவாயா
(உனைத் தொட்ட காற்று
எந்தன் காதில் சொன்னது
உணர்வுகளைத் தீண்டி
நெஞ்சில் வெட்கம் தந்தது)
காற்று சொன்ன வார்த்தைகள்
உளியாய் மாறி இதயத்தை
காதல் என்னும் காலம் அழியா
சிற்பம் செய்தது
பல்லவரின் சிற்பங்கள்
என் இதயத்தைக் கண்டு சென்று
கடற்கரையில் கண்ணீராய்
அதன் கர்வம் தீர்ந்தது
நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...
தேனீகளாய்
என் மனங்களடி
உன்னைத் தேடிச் சென்று
என்னில் சேர்த்ததடி
உயிரைக் கொடுத்து
உனைக் காக்குமடி
உன் உறவைக் கொண்டு
உயிர் வளர்க்குதடி
நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...
நிலமாய் இங்கு நானடியே
நிலத்தடி நீராய் நீயடியோ
என்னில் நீயும் வற்றிப்போனால்
நிலம் அதிர்வு காணுதே
நிலம் நான்
பூக்கள் பூக்கவா
பூகம்பம் வார்க்கவா
நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...
எந்தன் காதில் சொன்னது
உணர்வுகளைத் தீண்டி
நெஞ்சில் வெட்கம் தந்தது
அது சொன்னதை அறிவாயா...
எந்தன் உணர்வுகள் புரிவாயா...
கண்ணை மூடி திறக்கும் முன்னே
கண்ணெதிரே நீ வருவாயா
(உனைத் தொட்ட காற்று
எந்தன் காதில் சொன்னது
உணர்வுகளைத் தீண்டி
நெஞ்சில் வெட்கம் தந்தது)
காற்று சொன்ன வார்த்தைகள்
உளியாய் மாறி இதயத்தை
காதல் என்னும் காலம் அழியா
சிற்பம் செய்தது
பல்லவரின் சிற்பங்கள்
என் இதயத்தைக் கண்டு சென்று
கடற்கரையில் கண்ணீராய்
அதன் கர்வம் தீர்ந்தது
நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...
தேனீகளாய்
என் மனங்களடி
உன்னைத் தேடிச் சென்று
என்னில் சேர்த்ததடி
உயிரைக் கொடுத்து
உனைக் காக்குமடி
உன் உறவைக் கொண்டு
உயிர் வளர்க்குதடி
நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...
நிலமாய் இங்கு நானடியே
நிலத்தடி நீராய் நீயடியோ
என்னில் நீயும் வற்றிப்போனால்
நிலம் அதிர்வு காணுதே
நிலம் நான்
பூக்கள் பூக்கவா
பூகம்பம் வார்க்கவா
நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக