வியாழன், 18 ஏப்ரல், 2019

பாடல் 3

ராசாத்தி
என் ராசாத்தி
என் ராசாத்தி
உன்னாலே நெஞ்செல்லாம்
காதல் தீ

உனக்காகவே
நான் வாழ்கிறேன்
நீ வேண்டுமே

உறங்காமலே
நான் பாடினேன்
உன் உறவு வேண்டுமே

ராசாத்தி
என் ராசாத்தி



கட்டியணைத்தேன்
முத்தம் கொடுத்தேன்
முடிவு இல்லையே

உன்னை
விட்டு விலகி
வந்த பிறகும்
பிரிவு இல்லையே

மீண்டும் மீண்டும் காணவே
காதல் வானில் போகவே
நீ வர வேண்டும்
வரம் தர வேண்டும்

ராசாத்தி
என் ராசாத்தி
என் ராசாத்தி
உன்னாலே நெஞ்செல்லாம்
காதல் தீ



உள்ளம் கலந்த
உயிர் இணைந்த
உறவு நீயம்மா

உன்னை இழந்த
சிறகு ஒடிந்த
பறவை நானம்மா

காயம் என்னில் ஆறவே
காலம் முழுதும் வாழவே
உன் மடி வேண்டும்
அதில் துயில் வேண்டும்
    

சனி, 13 ஏப்ரல், 2019

பாடல் 2

உனைத் தொட்ட காற்று
எந்தன் காதில் சொன்னது
உணர்வுகளைத் தீண்டி
நெஞ்சில் வெட்கம் தந்தது

அது சொன்னதை அறிவாயா...
எந்தன் உணர்வுகள் புரிவாயா...

கண்ணை மூடி திறக்கும் முன்னே
கண்ணெதிரே நீ வருவாயா

(உனைத் தொட்ட காற்று
எந்தன் காதில் சொன்னது
உணர்வுகளைத் தீண்டி
நெஞ்சில் வெட்கம் தந்தது)





காற்று சொன்ன வார்த்தைகள்
உளியாய் மாறி இதயத்தை
காதல் என்னும் காலம் அழியா
சிற்பம் செய்தது

பல்லவரின் சிற்பங்கள்
என் இதயத்தைக் கண்டு சென்று
கடற்கரையில் கண்ணீராய்
அதன் கர்வம் தீர்ந்தது

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...





தேனீகளாய்
என் மனங்களடி
உன்னைத் தேடிச் சென்று
என்னில் சேர்த்ததடி

உயிரைக் கொடுத்து
உனைக் காக்குமடி
உன் உறவைக் கொண்டு
உயிர் வளர்க்குதடி

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...





நிலமாய் இங்கு நானடியே
நிலத்தடி நீராய் நீயடியோ
என்னில் நீயும் வற்றிப்போனால்
நிலம் அதிர்வு காணுதே

நிலம் நான்
பூக்கள் பூக்கவா
பூகம்பம் வார்க்கவா

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...


    

வியாழன், 11 ஏப்ரல், 2019

பாடல் 1

அறியாத ஒன்றாலே மனம் ஆர்வமாச்சி
அதைத்தேடிப் பின்னாலே கால்கள் போச்சு
முடியாத பயணம் ஒன்று தொடர்கதையாச்சு
அடிப்பெண்ணே உன்னால் என்மனம் அடிமையாச்சு


என்னுள்ளே உரையாடல்
ஏதேதோ விதிமீறல்
ஏதொன்றும் புரியாமல்
மனம் ஏங்கிப் போச்சு
என்னை நான் அறியாமல்
உடல் தூங்கிப் போச்சு


உன் சுவாசம் எந்தன் தென்றலாச்சு
என்னோடு ஏனோ கண்ணாம்பூச்சி


இரு கண்கள் இணை சேரும்
முடிவில்லா துளி நேரம்
முடிவுண்டு எனத் தோன்றும்
இது முடிவில்லா நீள் வானம்


கரைகாணாக் கண்கள்
இங்கு கண்ணீராச்சு
கடல் நீரே இல்லாமல்
ஒரு உப்பளமாச்சு


என் வாழ்க்கை
ஏனோ இங்கு சொப்பனமாச்சு
நீ வந்து சேர்ந்தால்தான்
நீளும் மூச்சு


உன் சுவாசம் எந்தன் தென்றல் ஆச்சு
என்னோடு ஏனோ கண்ணாம்பூச்சி

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

நீ இருந்தவரை
கண்ணீரும் இனித்ததடி
தேவதையைப் பிரிந்து விட்டேன்
தேன் கூடக் கசக்குதடி

நாழிகைகள் அம்பாகி
நெஞ்செல்லாம் பாயுதடி
அட்சதைகள் தூவும் வானம்
அமில மழைப் பொழியுதடி

உன்னைச் சேர
துடிக்கும் இதயம்
நித்தம் தேடும்
இமைக்கா இமையும்

சப்தம் போடும்
ஊமை மனதும்
யுத்தம் செய்யும்
உந்தன் நினைவும்

சூழல் எல்லாம்
சிறையாகிப் போனது
காலம் எனக்கு
கல்லறை வார்க்குது