வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

எனக்கு மட்டும்
இரண்டு நிலவுகள்
பகலிலும் ஒன்று
என்னைப் பிரிவதேயில்லை

இடைவெளிகள் இருந்தும்
இறுக்கங்கள் தளராத அணைப்பு
மனக் குளத்தில்
நிலவின் பிம்பம் போல


நீங்காத வாசம்
நெஞ்சோடு தினம் பேசும்
யாரும் கேட்காத
ஊமை மொழி
கேட்டுக் கொண்டிருக்கையில்
இறைவா என்னை அழி

எதுவுமே நிரந்தரமில்லைதான்

உயிருள்ளவரை
இதய ஓசையும்
அவள் மீதான
எனது ஆசையும் தவிர...


என் உதடுகளில்
உன் உதட்டின் சுவடுகளை
நாவால் துழவுகிறேன்

சுவடறியாத காற்றை
தடம் தேடியே சுவாசிக்கிறேன்...

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

சொந்த வாழ்க்கைச்
சொல்லும் அறிவுரை,
பிறர் சொல்லிக்
கேட்பது வீண்...

ஒவ்வொரு நாழிகையும் கல்வி,
இறந்த காலத்திலும்
எதிர் காலத்திலும்
படித்து என்ன பயன்...

இயற்கையின் குழந்தையாய் இரு
உன் மூன்றாம் கண்ணைத் திறக்கும்

உண்மை அன்பை
நீ அறியாததுவே சோகம்...