வெள்ளி, 8 ஜனவரி, 2016

கனவு

நித்திரையில் ஒர் புதுவுலகம்
இவ்வுலகில் மனம் உலவும்
உறக்கத்தில் ஏனிந்த ஊர்வலம்...

கண் காண
மனம் சித்தரிக்கும் - கனவோ
மனம் காண
உணர்வுகள் சித்தரிக்கும்

வானத்தை தலைகுனிந்து
பார்க்க வைக்கும்

விண்மீன்களுக்கு தூண்டிலிடும்

நிலவை
உள்ளங்கையில் சிறைபடுத்தும்

அவ்வுள்ளங்கைதனை
சிட்டெறும்பும் விழுங்கவைக்கும்

கண்ணுக்குள்
காதலியை உறங்கவைக்கும்
இமையை
விசிறியாக்கி விசிறவைக்கும்
கண்ணீரால்
உறக்கம் கலையுமென்று
அணையொன்று
கட்டிவைத்து அதைத்தடுக்கும்

இதனை
விலைகொடுத்து வாங்கமுடியாது
விரைவில் கூட
காணமுடியது

நினைவுத்தாய்
பெற்றெடுத்த இக்குழந்தை
மனத்தரையில் தவழ்வதேனோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக