அதிகாலைப் பனியின் பிரிவில்
இலைகள் சிந்தும் கண்ணீர்,
மண்ணில்
என் இரவுத் துயரங்களையும்
சுமந்து கல்லறையானது...
தன்னந்தனியாக
குளத்தில் கல் எறிந்து கொண்டே இருக்கிறேன்,
நீயும் மறைவதாய் இல்லை
நானும் விடுவதாய் இல்லை...
உன் நியாபகங்கள் எல்லாம்
அலையலையாய் வட்டமிடும்,
நீர்த் துளிகள் தாவிவந்து
கண்ணத்தை முத்தமிடும்...
அன்பே
உன் உதட்டுடன் உறவாடினேன்
முத்தத்தில் உறைந்த நீ
மறைந்து போனாய்
வெளிச்சம் இன்றி,
நிஜம் மட்டுமல்ல
நிழலையும் நேசிக்கிறேன்.
இலைகள் சிந்தும் கண்ணீர்,
மண்ணில்
என் இரவுத் துயரங்களையும்
சுமந்து கல்லறையானது...
தன்னந்தனியாக
குளத்தில் கல் எறிந்து கொண்டே இருக்கிறேன்,
நீயும் மறைவதாய் இல்லை
நானும் விடுவதாய் இல்லை...
உன் நியாபகங்கள் எல்லாம்
அலையலையாய் வட்டமிடும்,
நீர்த் துளிகள் தாவிவந்து
கண்ணத்தை முத்தமிடும்...
அன்பே
உன் உதட்டுடன் உறவாடினேன்
முத்தத்தில் உறைந்த நீ
மறைந்து போனாய்
வெளிச்சம் இன்றி,
நிஜம் மட்டுமல்ல
நிழலையும் நேசிக்கிறேன்.